திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் வேடத்தில் நடித்து தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் ராணா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விமானப்பயணம் மேற்கொண்ட ராணா ஹைதராபாத்தில் வந்து இறங்கியபோது தன்னுடைய லக்கேஜ் ஒன்று மிஸ் ஆனதை கவனித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த விமான ஊழியர்களிடம் கேட்டபோது அவருடைய லக்கேஜ் எப்படி மிஸ் ஆகி இருக்கக்கூடும் என்பது பற்றி கூட யாராலும் தகவல் சொல்ல முடியாமல் கையை பிசைந்துள்ளனர்.
இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராணா, இந்தியாவிலேயே மிக மோசமான விமான சர்வீஸ் என்று சம்பந்தப்பட்ட பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்துள்ளார். இதையடுத்து அந்த விமான நிறுவனம் ராணாவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதுடன் விரைவில் மிஸ் ஆன அவரது லக்கேஜையும் கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்துள்ளது.